கேட்டவர் உண்டோ
யாராகிலும் ?
_____________
என் காதலை நம்பாதே
எந்த காதலராவது
அல்லது
உங்களில் யாராகிலும்..
பொய் சொல்லலாம்.
இங்கே நீதிதான் கிடைக்கும்
எந்த நீதிபதியாவது
அல்லது
உங்களில் யாராகிலும்.
உண்மையும் பேசலாம்
நான் கடவுள்தான்; நம்பு.
எந்த கடவுளராவது
அல்லது
உங்களில் யாராகிலும்.
சாமிகள் சொல்லலாம்
புத்தகம் படி
யாரிட்ட கட்டளை
ஆசிரியர் தவிர.
எந்த புத்தகமாவது.
உலகம் பெரிது
அனுபவம் பலவிதம்
அனுபவி அனுபவி
எந்த தந்தையராவது.
மருமகள் போல
மகளும் ஒரு வீட்டு மருமகள் தானே
நினைத்தவர் உண்டோ
எந்த தாயாவது.