நான் என்னவாகி யிருப்பேன்
மிருகமாக
அல்லது
அன்பே
என் மீது எவரும் காட்டாத
எனக்கும்
எவர்மீதும்
அன்பு செலுத்த தெரியாத
மிருகமாய்
நீ இல்லை யென்றால்
என்மீது அன்புசெலுத்த
எவரும் பிறக்கவில்லை என்பதைப்போல
நான் அன்புகாட்ட
எவரும் இருந்திருக்கமாட்டார்
பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது
உன்மீதான அன்பு
பார்ப்பதற்கு
உன்னெதிர்
நிழற்படம்
தொலை அழைப்பு
என்று எனக்கு எதுவும்
தேவையாய் இருக்கவில்லை
உன்நினைவுகள்
என்றுமே வாழ்பவை
வானைவிட
நீரைவிட
நிலத்தைவிட
நம் அன்பு பெரியது
நாம் சொல்லவில்லை
யாவரும் சொல்வர்
என்மீது
என்கோபம்
என்மீது உன்அன்பு
என் செளகரியங்களில்
உன்அக்கறை
இவைத்தவிர