Blog Archive

Thursday, December 22, 2016

நான் என்னவாகி யிருப்பேன்
மிருகமாக
அல்லது
அன்பே
என் மீது எவரும் காட்டாத
எனக்கும்
எவர்மீதும்
அன்பு செலுத்த தெரியாத
மிருகமாய்

நீ இல்லை யென்றால்
என்மீது அன்புசெலுத்த
எவரும் பிறக்கவில்லை என்பதைப்போல
நான் அன்புகாட்ட
எவரும் இருந்திருக்கமாட்டார்

பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது
உன்மீதான அன்பு
பார்ப்பதற்கு
உன்னெதிர்
நிழற்படம்
தொலை அழைப்பு
என்று எனக்கு எதுவும்
தேவையாய் இருக்கவில்லை
உன்நினைவுகள்
என்றுமே வாழ்பவை

வானைவிட
நீரைவிட
நிலத்தைவிட
நம் அன்பு பெரியது
நாம் சொல்லவில்லை
யாவரும் சொல்வர்
என்மீது
என்கோபம்
என்மீது உன்அன்பு
என் செளகரியங்களில்
உன்அக்கறை
இவைத்தவிர

என்னவேன்டும்சாட்சியாக
மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்


மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்
எதிரே வந்த மாதிரி
அம்புட்டு நாத்தம்
குதிரைமேல் சவாரி
எலுமிச்சைக் குத்தின வீச்சரிவாளோடு
பெரிய வீட்டு வாரிசு
பார்த்த சனம்  
சாமியக் கண்டு விலகி ஒடுங்கிச்சி

அந்த அதிகாலை வேளையில்
முனியம்மா
மஞ்சபூசி
குளிச்சி முழுகி
வாளிப்பான கருங்கல் மேனி மினுக்க
சந்தன அபிஷேகம் மாதிரி முகமும்
முண்டை செருக்கி

கிழக்குப்பார்த்த வெட்ட வெளி டீக்கடைக்குள்ளார
அதிகாலை கிடாவெட்டு மினீஸ்வரனுக்கு
சீக்குப் பயச்சாமி
இன்னொத்தையும் காவு கொண்டான்
ஊரே நாறிச்சி
கேக்க சனம் இல்ல
கெட்ட சாதிக்கும் தெம்பில்ல.
பாவப் பொறப்புங்க
எத்தனைப் பொம்பளைங்க
இதுக்கு மட்டும் சாதியில்ல
எங்க ஊரு சாமிங்களுக்கு.

சாமிக்கு அடிவயித்து கட்டியாம்.
அடையாறு ஆசுபத்திரிக்குப் போய் வருதாம்
விரசா நெருங்கிடுமாம் சாவு
சாமியோட சாவுல

அத்தனைச் சந்தோஷம் குடிபடைக்கு.