கருவறைச் சிறையில்
பூரணமாயிருந்த விடுதலை வேட்கை
தொப்பூழ்க் கொடியின் துண்டிப்பில்
பறிக்கப்பட்டது.
நீ
மாற்றப்பட்டாய்
தனிக் கொட்டடிக்கு
உன் குடும்ப வாழ்க்கைக்கு
இப்போது
உடலுறவுக்கென்று படைக்கப்பட்ட
இன்னொரு உயிராய்
வம்ச விருத்தியின்
சங்கிலித் தொடரின் இணுக்காய்
நீ.
ஜீனோவாக சேவகமும்
வேடிக்கைப் பிண்டமுமாய்
உன் வாழ்க்கை.
உன் உடம்பில் சேவகன் ஆதாமின்
அடிமை இரத்தம்.
அலைகழிக்கும் அக்கம் பக்கம்
பீற்றிக் கொள்ளும் பெருமைக்கு
நீ மாறிக் கொள்வாய்
அரிச்சந்திரனாய்.
உன் பிறப்பின் மறுபடியும்
ஒரு நிரூபனம்;
'மரணத்தில் மட்டுமே
உன் விடுதலை சாத்தியம்'.
No comments:
Post a Comment