மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்
மினீஸ்வரனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக் கிடாய்
எதிரே வந்த மாதிரி
அம்புட்டு நாத்தம்
குதிரைமேல் சவாரி
எலுமிச்சைக் குத்தின வீச்சரிவாளோடு
பெரிய வீட்டு வாரிசு
பார்த்த சனம்
சாமியக் கண்டு விலகி ஒடுங்கிச்சி
அந்த அதிகாலை வேளையில்
முனியம்மா
மஞ்சபூசி
குளிச்சி முழுகி
வாளிப்பான கருங்கல் மேனி மினுக்க
சந்தன அபிஷேகம் மாதிரி முகமும்
முண்டை செருக்கி
கிழக்குப்பார்த்த வெட்ட வெளி டீக்கடைக்குள்ளார
அதிகாலை கிடாவெட்டு மினீஸ்வரனுக்கு
சீக்குப் பயச்சாமி
இன்னொத்தையும் காவு கொண்டான்
ஊரே நாறிச்சி
கேக்க சனம் இல்ல
கெட்ட சாதிக்கும் தெம்பில்ல.
பாவப் பொறப்புங்க
எத்தனைப் பொம்பளைங்க
இதுக்கு மட்டும் சாதியில்ல
எங்க ஊரு சாமிங்களுக்கு.
சாமிக்கு அடிவயித்து கட்டியாம்.
அடையாறு ஆசுபத்திரிக்குப் போய் வருதாம்
விரசா நெருங்கிடுமாம் சாவு
சாமியோட சாவுல
அத்தனைச் சந்தோஷம் குடிபடைக்கு.
No comments:
Post a Comment