Blog Archive

Thursday, December 22, 2016

நான் என்னவாகி யிருப்பேன்
மிருகமாக
அல்லது
அன்பே
என் மீது எவரும் காட்டாத
எனக்கும்
எவர்மீதும்
அன்பு செலுத்த தெரியாத
மிருகமாய்

நீ இல்லை யென்றால்
என்மீது அன்புசெலுத்த
எவரும் பிறக்கவில்லை என்பதைப்போல
நான் அன்புகாட்ட
எவரும் இருந்திருக்கமாட்டார்

பார்த்தவுடன் பற்றிக்கொள்கிறது
உன்மீதான அன்பு
பார்ப்பதற்கு
உன்னெதிர்
நிழற்படம்
தொலை அழைப்பு
என்று எனக்கு எதுவும்
தேவையாய் இருக்கவில்லை
உன்நினைவுகள்
என்றுமே வாழ்பவை

வானைவிட
நீரைவிட
நிலத்தைவிட
நம் அன்பு பெரியது
நாம் சொல்லவில்லை
யாவரும் சொல்வர்
என்மீது
என்கோபம்
என்மீது உன்அன்பு
என் செளகரியங்களில்
உன்அக்கறை
இவைத்தவிர

என்னவேன்டும்சாட்சியாக

No comments: