வல்லரசாகும்
கனவு
வயல்களில் உழவர் பிணங்கள்
வங்கிகளில் செல்லா காசுக்கு மரணங்கள்
பதுக்குபவர்களுக்கு வசதியாக இரண்டாயிரம்
பக்கிகளுக்கு சில்லறைத் தேட இரண்டாயிரம்
குடுமிப் பிடியில் மக்கள்
காவல்காரர்கள் திருடுகிறார்கள்
திருடர் கையிலும்
அதிகார மாட்சியில் அடக்குமுறை
போர்வாள் தம்தம் குடிமக்கள் மீதே
ஹிட்லர்கூட தன்முனைப்பில்
தவிடு பொடியானான்
இந்தியத் தலைவனால்
வல்லரசான நாடுகளின் வரலாறு
மக்களின் பிணங்களின் மீதுதான்
இது நடைமுறை
இந்தியக் கனவும் இனிதே நிறைவுறும்.
No comments:
Post a Comment