Blog Archive

Saturday, October 30, 2004

நாம் இருப்பது நகரம்

kavithaikkaL
நாம் இருப்பது நகரம்
தீவல்ல.
ஆடைகள்
குறையும் கூடலாம்

இலை தழைகள்
தீவுக்கானது
நமக்கானது அல்ல..

நிர்வாண நகரங்கள்
நிர்மாணமாக
இன்னும்
பூமி சபிக்கப் படவில்லை
அந்நாளில்
நாம்
அலைகடலின் ஓரத்தில்
ஒதுங்கலாம்
அல்லது
சுறை குடுக்கைக்குள்
மனித உற்பத்திக்காக
மனிதனின் உயிரணுக்கள்
தேவதைகளால்
சிந்தாமல் சேகரிக்கப் படலாம்
அதுவரையிலும்
பிடிக்கவில்லையென்றாலும்
நமக்காக தறிக்கப் பட்ட
டைகளை அணிந்தே கணும்
இதுகட்டாயம்.

தாமுக்கும்
அவன் காதலிக்கும்
நெய்யப் பட்டது
நிர்வாணம் மட்டுமல்ல
அவர்கள்
உடுத்திக் கொண்டிருந்தார்கள்
இச்சையை.
இச்சை டையை
நிர்வாணப் படுத்தி
அவர்கள்
உடுத்திக் கொண்டிருந்தார்கள்
அவர்களின்
ஆசை உடுப்பு
உங்களுக்கு
நிர்வாண்மாயிருந்தது
அவர்களின்
உடையின் பெயர் நிர்வாணம்
நீங்களும்
உடுத்திக் கொண்டிருந்தீர்கள்
அரை குறையாக
உங்கள் அரை குறையை
உடுப்பென்றே
சாதித்தீர்கள்

நிர்வாணம்
உண்மையில் அது
நிர்வாணம் அல்ல
நிஜ டை.
ஆசையில்லா டை.

சதைமோகத்திற்கு மட்டுமே
டைகள் அவசியம்
ஏவாளீன் நிர்வாணம்
உஙகளின்
உற்பத்திக்காக
அவர்களின் தேவை உற்பத்தி
முதலிரவின் போது
களையும் டைகளும்
பழத்தட்டு வரிசைகளும்
உங்களுக்குப் பரிச்சயம் என்றால்
உங்களின் சாபம்
அவர்களுக்கானது அல்ல..

காமன் அவர்களிடை தீ மூட்டினான்
நீங்களோ காமனைச் சாக்கிட்டு
வெந்து மடிகிறீர்கள்
காமனின் மிச்சமான
காதல் தீயில்.


No comments: