Blog Archive

Saturday, October 30, 2004

நிரந்தரமானவன்.

நிரந்தரமானவன்.
____________________________
கவலையை விடு
காதற் கோப்பகளில்
ஊற்றப்படுவது
எப்போதும்
"தோல்வி” விஷம் தான்.

இறங்கி முங்கினால்
குளிர் விட்டுப் போகும்
ஆற்று நீர் காதல்
கசந்து தான் போகும்.

காதலில் உயர்ந்தது கைக்கிளை
மீறி தொடர்வதெல்லாம்
முடிவில் முகாரி தான்.

காதல் நாடகம்
அவளின்றி நடக்கலாம்
வேறொரு துணையுடன்--
ஆனால்
நீ முக்கியம்
ஏனென்றால்
நீ மாண்டுப் போகிற காதலோ
காதலியோ அல்ல
கவிஞன் ...

நிரந்தரமானவன்.
_____________"ஜோதி"_
(jeyapalt@yahoo.com)
த.செயபால்., எம்.ஏ. பி.ஜி.எல்., டி.எச்.பி.எம்.,
1258, பூம்புகார் நகர், கொளத்தூர், சென்ன-600 099.

No comments: