Blog Archive

Saturday, October 30, 2004

தண்ணிக் கலவரம்

தண்ணிக் கலவரம்
_________________
ஆண்குறி பார்த்து
படுகொலை நடந்த
நவகாளியை
அண்மையில் பார்த்தோம்
குஜராத்தில்.

ஆண்களின் பெயரில்
அன் விகுதிப் பார்த்து
அடித்து நொறுக்குது
பெங்களூரூ
அது எங்க ஊரு.

உயிருக்குப் பயந்து
மஞ்சள் கயிறு
மணியானது
கருக மணியானது
பல உயிர்கள் பலியானது.

மல்லையா கடையில
கொட்டிக் கொடுத்து
குடிக்கிறோம் சாராயம்
வெட்கமில்லே..
தண்ணிக்கு மட்டும்
தாலி இழக்கிறோம்
முதுகில எலும்பு இல்லே.

சினிமா தியேட்டரை
மூடினா போடுற
பேப்பரு
தண்ணியை மட்டும்
அந்துமணி குந்துமணி
ஆக்குது....

ஒற்றுமையா இருக்குது இந்தியா
மேப்புல
நல்லா சிரிக்கிறார் காந்தி
நோட்டுல.

No comments: