Blog Archive

Saturday, March 31, 2007

-கெட்டிக்கார தலைவி
---------------------------------------
சம்பள தேதியில்
இனிப்பு இத்யாதிகள்
வாங்கிச் செல்கிற வழக்கம்
அன்றும் அப்படித்தான்..........

பிரித்து எடுத்த ஸ்வீட் பாக்ஸை
சற்றிக் கொண்டனர் பிள்ளகள்!
மழலையில் கேட்ட கடைக்குட்டி
'அப்பா எனக்கும்'

மனயாட்டி வந்தாள்
வீட்டின் முதல் தைரியசாலி.

'இப்படித்தான் கையில் இருந்தால் தங்காது-
ஊதாரி'
முதல் தகவல் அறிக்கை-
குற்றப் பத்திரிகையை வாசித்தாள்!

பயத்தில் பெற்றோர்கள் பிள்ளகள்
இப்போ எல்லோரும்
என் எதிரணியில்.

எதிர்பார்ப்பு நடந்தேறியது
நிதிஇலாகா சமையற்கட்டிற்கு மாற்றப் பட்டது.
மாமிசம் கூடாது புத்தராய்
கொலஸ்டிரால் புராணம் டாக்டராய்
தினமும் அப்பளம் ரசம் கஞ்சி
சிக்கனம் பின்பற்றப்படுகிறது
பிள்ளைகள் மாட்டினர்
ஞாயிறு கிழமையில் வீட்டில்
நாய்கூட உண்பதில்லை.

கெட்டிக்கார மனைவி
மாசக்கடைசியில்
திடீர் பளபளப்பில்
காஞ்சி புரத்தில் ஒரு சுற்று கூடியிருந்தாள்

இப்போது பெற்றோர்கள்
பிள்ளைகள் என எல்லோரும்
செய்வதறியாது
கையப் பிசைகிறார்கள்
அமர்த்திவிட்டு அவதிபடும்
மக்களைப்போல.......................

1 comment:

ManianMadhu said...

hi jothi..

romba vithayasamana kavithaikal. nalla iruuku.
vaalthukal.